மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை தடை செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் மனு அளித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு கடந்த 20 ஆம் தேதி அறிவித்தது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.